• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கனி முறைப்படி நடைபெற்ற ரன்வீர் சிங் -தீபிகா படுகோன் திருமணம்

November 14, 2018 தண்டோரா குழு

நடிகர் ரன்வீர் சிங் – நடிகை தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மந்தம் தெரிவித்த நிலையில், இன்று இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில்,வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில் இவர்களது திருமணம் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.

நாளை ஆனந்த் கராஜ் முறை திருமணம் நடைபெற உள்ளது.இவர்களின் திருமணத்திற்காக அழகிய நகரமான லேக் கோமாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.தீபிகா,ரன்வீரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும்,திருமண விழாவுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் மிகுந்த மரியாதையோடு இருவரும் சேர்ந்து வரவேற்றுள்ளனர்.இதையடுத்து,இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க