• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார் – வித்யாசாகர் ராவ்

November 1, 2018 தண்டோரா குழு

அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்த போது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார் என அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அப்போது தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்,01.10.16 அன்று,மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவை பார்த்தார்.இது தொடர்பாக,06.10.2016 ல் குடியரசுத் தலைவருக்கு,ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்த போது, அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார்.உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.அவ்வப்போது,ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க