• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பழிவாங்கும் அதிவேக பைக்குகள்

September 3, 2016 தண்டோரா குழு

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி இளம் வயது வாலிபர்களும் தற்போது அதிவேக பைக்குகளை வாங்கி அதற்கு தன்னுடைய உயிரையும், இரத்தத்தையும் காணிக்கையாகத் தருவது தற்போது அதிகரித்து வருகிறது.

சமீப காலமாக இருசக்கர வாகனத்தில் அதிவேக பைக்குகள் பிரபலமாகி வருகிறது. இவை அனைத்தும் இளைஞர்களைக் குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் வண்டியை வாங்கியவுடன் அதி வேகமாக ஒட்டி சாகசம் செய்வதைப் பெருமையாக நினைக்கின்றனர்.அதிலும் ஒரு சிலர் அதிக தூரம் சென்று திரும்புவதை நட்பு வட்டாரத்தில் பெருமையாக நினைத்து வருகின்றனர்.

இது பல்வேறு சமயங்களில் ஆபத்தில் முடியும் என அவர்கள் நினைப்பதில்லை.அவ்வாறு இன்று காலை சேலத்தில் இருந்து வேலூர் வி.ஐ.டி கல்லூரிக்கு அதிவேக இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் அரவிந்த் மற்றும் இளவரசன் ஆகியோர், வாணியம்பாடி பெருமாள்பேட்டை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு வேலி மீது மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவுசெய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க