• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் – நிவேதா பெத்துராஜ்

October 29, 2018 தண்டோரா குழு

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.தற்போது வெங்கட்பிரபுவின்’பார்ட்டி’,விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு திமிரு பிடிச்சவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ்,

நான் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தேன்.அங்கு என்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.தவறு என் மீது தான்.நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்க கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.இப்போது நான் தெளிவாக இருக்கிறேன்.அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.மேலும்,மீடு குறித்து சம்பவம் நடந்த உடனே வெளியே சொல்ல வேண்டும்.நீண்ட நாட்கள் கழித்து சொல்வதால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க