October 25, 2018
தண்டோரா குழு
மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவை தமிழிசை மற்றும் பா.ஜ.,வினர் மிரட்டியதாக மாணவியின் தந்தை சாமி தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த என தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் தமிழிசை உட்பட பா.ஜ.,வினர் 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் வழக்குபதிவு செய்து அதன் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதி க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.