• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இடைத்தேர்தல் நடத்துவதை விட சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் – ப.சிதம்பரம்

October 25, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில்,20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.மேலும்,சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில்,தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட,சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

இன்றைய உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது.18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க