October 25, 2018
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு 3 இலட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் ஆகிய கோரிக்களை வலியுறுத்தி,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில்,இதுவரை தமிழக அரசு தங்களை அழைத்து பேசவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்,தங்கள் பிரதிநிகளை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷ்ங்களை எழுப்பினர்.