• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த தாயின் சடலத்தை 12 கிமீ பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்

September 1, 2016 தண்டோரா குழு

ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தாயாரின் உடலை சுமார் 12 கிலோமீட்டர் பைக்கில் கொண்டு சென்ற அவல சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேசம் உலாட் கிராமத்தைச் சேர்ந்த பர்வதா பாய்(70) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மகன்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவசர ஊர்திக்குப் பலமுறை அழைப்பு விடுத்தனர்.ஆனால் அவர்கள் வரவில்லை.

இதனால் பர்வதா பாயின் 2 மகன்கள் மோட்டார் சைக்கிளில் தாயை நடுவில் உட்காரவைத்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.ஆனால்,செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக மீண்டும் அவருடைய உடலை மோட்டார் சைக்கிளிலேயே வீட்டிற்குக் கொண்டு வந்து உள்ளனர்.இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அம்புலன்ஸ் இல்லாமல் மனைவியை 12 கிலோ மீட்டர் சுமந்த கணவன்,மனைவி உயிரிழந்ததால் நடுக்காட்டில் இறக்கி விடப்பட்ட குடும்பம் மற்றும் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் மகனைத் தோலில் தூக்கிச்சென்ற தந்தை என பல்வேறு அவலங்கள் அரங்கேறியுள்ள நிலையில் இந்த அவலம் அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைகளில் உள்ள அவசர ஊர்தியின் தேவையை வேண்டிக் கேட்கும் மக்களுக்கு அவை தரமறுப்பது ஏன்? அப்படி அதைத் தராமல் இருப்பதால் எத்தனை உயிர்களின் மரணத்திற்கு ஆளாகிறோம்.இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க மாநிலம் மற்றும் மத்திய அரசு உடனே செயலில் இறங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என தற்போது சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க