• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிட்லி புயலுக்கு ஆந்திராவில் 8 பேர் பலி

October 11, 2018 தண்டோரா குழு

டிட்லி புயலுக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளம்,விஜயநகரம் மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கக்கடலில்,சென்னைக்கு தென் கிழக்கில் உருவான டிட்லி என்ற பெயரிடப்பட்ட அதிதீவிர புயல்,நேற்று (அக்.,10) மாலை,ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே 200 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.

இப்புயலால் ஆந்திராவின் விசாகப்பட்டினம்,விஜய நகரம்,ஸ்ரீகாகுளம்,ஒடிசாவின் கஜபதி,கஞ்சம்,குர்தா,நயாகார் மற்றும் புரி ஆகிய மாவட்டங்களில்,கடும் பாதிப்பு ஏற்படும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.இதையடுத்து இப்புயல் மணிக்கு 14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் ஆந்திரா- ஒடிசா இடையே கரையை கடந்தது.

இந்நிலையில்,புயல் காரணமாக ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.டிட்லி புயல் காரணமாக 2 மாவட்டங்களிலும் மின்சாரம், தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மேலும் படிக்க