• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது– நடிகை சமந்தா

October 9, 2018 தண்டோரா குழு

தமிழ்,தெலுங்கு என இருமொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.மதுரையில் நேற்று நடந்த தனியார் கைபேசி நிறுவனம் ஒன்றின் தொடக்க விழாவில் நடிகை சமந்தா கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு மதுரை மக்களின் பாசம் பிடிக்கும்.ரசிகர்கள் தான் என்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றியையும் தீர்மானிக்கின்றனர் என்று கூறினார்.அப்போது,அவரிடம் செய்தியாளர்கள்,நடிகைகள் ஸ்ரீரெட்டி,தனுஸ்ரீ மற்றும் கங்கனா என பலர் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பற்றி பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது குறித்து கருத்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா,நான் 10 வருடமாக சினிமாவில் இருந்துவிட்டேன்.சினிமாவிலிருக்கும் நடிகர் ஒருவரைத்தான் திருமணம் செய்திருக்கிறேன். கடவுளைப்போல் சினிமாவை மதிக்கிறேன்.என்னுடைய கேரியரில் எனக்கு எந்தவிதமான பாலியல் தொல்லைகளும் நடைபெற்றதில்லை.எல்லாத் துறைகளையும் போல திரைத்துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் துறையின் பெயர் கெடுகிறது” என்றுக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க