• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவமனையில் அனுமதி

August 30, 2016 தண்டோரா குழு

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இன்று விஜயவாடாவில் திடீர் என உடல் நலம் குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி (81) விஜயவாடாவில் உள்ள மடத்தில் திடீரென மயக்கம் அடைந்தார்.இதையடுத்து அங்கிருந்த மட உதவியாளர்கள் மற்றும் பக்தர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறும்போது,ஜெயேந்திரருக்கு ரத்தம் அழுத்தம் மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது.

இதற்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை.சிடி ஸ்கேன் போன்றவையும் எடுக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது.மாலை வரை அவர் ஐசியுவில் கண்காணிக்கப்படுவார் பின்னர் அவரது உடல் நலம் தேறியதும் வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க