• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் அருகே கேபிள் வயர் சரி செய்தவர்கள் மீது ரயில் மோதி விபத்து. மூவர் பலி

August 29, 2016 தண்டோரா குழு

திருப்பூர், ஊத்துகுளி சாலையில் உள்ள முதல் ரயில்வே கேட் பகுதியில், உள்ள ரயில் பாதையை கடந்து செல்லும் கேபிள் ஒயரில் பழுது ஏற்பட்டதை அடுத்து அதைச் சரி செய்யும் பணியில், சடையன், சின்னசாமி மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ரயில் இரும்புப் பாதையில் இருந்த அவர்கள் மீது, ஈரோட்டில் இருந்து வந்த ரயில் மோதியது. இதில் சடையன் மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

ராமலிங்கம் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க