• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் இரண்டு லட்சம் பணம் கொள்ளை

August 29, 2016 தண்டோரா குழு

காஞ்சிபுரம் அருகே விற்பனை பணத்தை எடுத்துச் சென்ற டாஸ்மாக் மேலாளரைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம்,அச்சிறுப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக இருப்பவர் தீனதயாளன்.இவரது வீடு சேப்பாக்கத்தில் இருப்பதால் இரவில் மது விற்பனை பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு விற்பனை முடித்துவிட்டு,சேப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விற்பனையாளர் மணியுடன் சென்றுள்ளார்.

இதையடுத்து அவர்களைப் பின் தொடந்த வந்த மூன்று மர்ம நபர்கள் அவர்களின் வாகனத்தை மறித்து கீழே தள்ளிவிட்டு,அவர்கள் வைத்திருந்த இரண்டு லட்சத்து 39 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து இவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதையடுத்து இரவு நேரத்தில் வசூலாகும் பணத்தை வங்கிகள் நேரடியாக வந்து கடையிலேயே வாங்கும் வசதியைச் செய்து தரவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் படிக்க