• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் வந்த மியான்மர் அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுடன் சந்திப்பு

August 29, 2016 தண்டோரா குழு

மியான்மர் அதிபர் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்து வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி கடந்த மார்ச் மாதம் ஆட்சியமைத்தது.இந்நிலையில்,கடந்த 22ம் தேதி மியான்மர் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக,மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் இந்தியா வந்துள்ளார்.சனிக்கிழமை வந்த அவர் அன்றே புத்த கயாவிற்கு சென்று பார்த்தார்.பின்னர் நேற்று அவரது மனைவியுடன் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைச் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில் இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரஜை சந்தித்து பல்வேறு முக்கிய ஒப்பந்தகள் குறித்துப் பேசி வருகின்றனர்.இது தான் மியான்மர் அதிபர் வெளிநாட்டில் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க