• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஷீரடி சாய்பாபா திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி

September 17, 2018 தண்டோரா குழு

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம் நிகழ்ச்சி சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு விழா,ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய் பக்தர்கள் பேரவை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மகாசமாதி நூற்றாண்டு மகா உற்சவ விழா தொடக்க நிகழ்ச்சி 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.அப்போது ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசன நிகழ்ச்சி கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவிலில் நடந்தது.இதில் பாபாவின் திருப்பாதுகையை சுமார் இரண்டரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்நிலையில் ஷீரடி சாய்பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா நிறைவிலும்,2வது முறையாக இன்று கோவைக்கு ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனம் நடைபெற்றது.

பாபாவின் திருப்பாதுகை 2வது முறையாக ஒரு நகருக்கு வருவது என்பது இதுவே முதல்முறை.ஷீரடி சாய்பாபாவின் திருப்பாதுகை தரிசனவிழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து வழிபட்டு சென்றனர்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டது.மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்,மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோர்கள் தரிசனம் பெற தனிவழி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் படிக்க