• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

YSCC கிரிக்கெட் அணி சார்பாக ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி தொடக்கம்

September 5, 2018 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் YSCC கிரிக்கெட் அணி சார்பாக ஐந்தாம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி(ஒரு நாள் விளையாட்டு போட்டி) வருகிற செப் 9ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் UIT கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐந்தாம் ஆண்டு YSCC கிரிக்கெட் அணி நடத்தும் இந்த கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் திமுக ஒன்றிய பொறுப்பாளர் அ.அறிவரசு அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.

நாக்வுட்முறையில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணிக்கும் 6 ஓவர்கள் வீதம்,ஒவ்வொரு அணியிலும் 6 பேர் விளையாடவுள்ளனர்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும்,இரண்டாம் பரிசாக 6000 ரூபாயும்,மூன்றாம் பரிசாக 3000 ரூபாயும்,நான்காம் பரிசாக 1500 ரூபாயும் வழங்கப்படுகிறது.

மேலும்,இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு கோப்பையை திரு.தீபன் பாபு(Album Clothings) அவர்களும்,இரண்டாம் பரிசு கோப்பையை திரு.எஸ்.ராஜா அவர்களும்,மூன்றாம் பரிசு கோப்பையை திருமதி.கலைவாணி செந்தில்குமார்(SK Motors,YAMAHA ShowRoom)அவர்களும் வழங்கவுள்ளார்கள்.இந்த போட்டி தொடரில் சிறந்த பேட்ஸ்மேன் விருதும்,சிறந்த பந்து வீச்சாளர் விருதும் வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க