• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழிசை மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார்

September 4, 2018 தண்டோரா குழு

காவல் துறையை மோசமாக விமர்சித்து,இரு மதத்திற்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசிய பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மாநகர காவல் துறை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கோவில் சொத்துக்கள் மீட்பு உண்ணாவிரத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இந்த ஆண்டும் மறுக்கப்பட்டால் காவிப்படை காக்கிகளை அடக்கியாளும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகும் எனவும்,காக்கிகளுக்கு காவிப்படை தகுந்த பாடம் நடத்தும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.இதனை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

தமிழிசை பேசியது காவல் துறையினருக்கு மிரட்டல்,சவால் விடுக்கும் வகையிலும்,சிறுபான்மையினரிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி பாதுகாப்பாற்ற சூழ்நிலையை உருவாக்கும் வண்ணம் அவரது பேச்சு அமைந்துள்ளது.எனவே தமிழிசை சவுந்தர்ராஜன் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்துதல்,கொலை மிரட்டல் விடுத்தால் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கோவை மாநகர ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க