• Download mobile app
19 Mar 2026, ThursdayEdition - 3690
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க காகிதப் பைகள் தயாரிப்பு

September 4, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள நிர்மலா கல்லூரியில் புவியியல் துறை சார்பில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உபயோகப்படுத்தப்பட்ட செய்தி தாள்களில் இருந்து, காகிதப்பைகளை தயாரித்து கல்லூரி உணவகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் இந்த காகிதப் பைகளை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காகிதப்பை தயாரிப்பு குறித்த செயல் விளக்கமுறை நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது.காகிதப் பைகள் தயாரிக்கும் முறைபற்றி உயிர் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் விஜயலட்சுமி பாஸ்கரராவ் காகிதப்பை தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.இந்த துறை மாணவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காகித பைகளை தயாரித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்த வேண்டும் என கோரி ஊக்குவித்தும் வருகின்றனர்.

கோவை நகரத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் வெற்றி,புவியியல் துறை முன்னாள் மற்றும் தற்போது பயிலும் மாணவியரின் முழு ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பால் சாத்தியமானதாக புவியியல் துறை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் படிக்க