• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.738 கோடி வந்துள்ளது – பினராயி விஜயன்

August 30, 2018 தண்டோரா குழு

கேரளாவுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 392 பேர் பலியாகி உள்ளனர் 33 பேரை காணவில்லை.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 1,722 வீடுகள் முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும் 20,945 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் கேரள உள்துறை தகவல் தெரிவித்துள்ளது.தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கேரளா சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்றது.கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.பேரிடர் நிவாரண நிதியாக ஆக.28 வரை கேரளாவுக்கு ரூ.738 கோடி வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும், கனமழையின் போது உதவிய அனைவருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க