• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையை திருட வந்ததாக சந்தேகித்து இளைஞருக்கு தர்ம அடி

August 29, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்,பிரசவ வார்டில் அத்துமீறி நுழைந்த இளைஞரை குழந்தை கடத்த வந்தவர் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு புகாரையடுத்து,கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் இன்று காலை பிரசவ வார்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் அத்துமீறி நுழைந்து உள்ளனர்.அப்போது பெண் காவலாளியான கீதா என்பவர், இளைஞரை பிடிக்க முயற்சித்துள்ளார்.இதனால் அச்சமடைந்த இளைஞர்,அவரை தள்ளிவிட்டு ஓட முயற்சித்துள்ளார்.

கீதாவின் கூச்சலையடுத்து திரண்ட,காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் இளைஞரை பிடித்து கடுமையாக தாக்கினர்.இதையடுத்து,பந்தய சாலை காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.பின்னர் அந்த இளைஞரை போலீசார் அழைத்து சென்றனர்.விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.மேலும் மற்றொருவர் தான் பெண் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.ஆனால் தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க