• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தில் புதிய கலைக் கல்லூரி முதல்வர் அறிவிப்பு

August 23, 2016 தண்டோரா குழு

இந்த ஆண்டே மேட்டுப்பாளையத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வித்துறை மானிய கோரிக்கை முடிந்து முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.அதில் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் 5 புதிய துவக்கப்பள்ளிகள் திறக்கப்படும்,விழுப்புரம் மற்றும் நீலகிரியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல மையம் 12 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை அருகே பெரும்பாக்கத்தில் 8.48 கோடி ரூபாயிலும், மேட்டுப்பாளையத்தில் 8.29 கோடி ரூபாயிலும் அரசு கலைக்கல்லூரி புதிதாகத் துவங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் இந்தாண்டுக்குள் 3 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும்,19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்

மேலும் படிக்க