மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, நடப்பாண்டில் தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் ஒரே ஒரு ஆசிரியர் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நடப்பாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த ஸதி ((Sathy)) என்பவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
இது குறித்து ஆசிரியர் ஸதி கூறுகையில்,
மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம். மலுமிச்சம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட்சிட்டி வகுப்பறைகள் உள்ளன. அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்