• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது !

August 25, 2018 தண்டோரா குழு

மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது, நடப்பாண்டில் தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டில் ஒரே ஒரு ஆசிரியர் பெயர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

நடப்பாண்டில் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையைச் சேர்ந்த ஸதி ((Sathy)) என்பவருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

இது குறித்து ஆசிரியர் ஸதி கூறுகையில்,

மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத்தருகிறோம். மலுமிச்சம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட்சிட்டி வகுப்பறைகள் உள்ளன. அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க