August 23, 2018
தண்டோரா குழு
கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கனமழையால் பாதித்த கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிவாரண நிதியை வரும் 25ம் தேதி கேரளா முதல்வரை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வழங்குகிறார்.