• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மரத்துக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஸா பந்தன் கொண்டாடிய நிதிஷ்குமார்

August 19, 2016 dnaindia.com

இந்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்காக பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் ராஜதானி விகிதா என்னும் இடத்தில் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஸா பந்தன் பண்டிகை கொண்டியுள்ளார்.

பெ‌ண்க‌ள் த‌ங்களது சகோதர‌ர் ம‌ற்று‌ம் சகோதர‌ர்களாக பா‌வி‌ப்பவ‌ர்களு‌க்கு ரா‌க்‌கி அணிவி‌க்கு‌ம் தினமே ர‌க்‍ஷா ப‌ந்த‌ன் ‌விழாவாகு‌ம். இந்தப் பண்டிகை வியாழக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.

மேலும் குறிப்பாக வட மாநிலங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, பரிசு பெற்று மகிழ்ந்தனர்.

மேலும் இப்பண்டிகை மௌரிசியஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் விமர்சனமாகக் கொண்டாடப்படுகிறது.பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் பச்சைப்பசேல் என்று தோன்றும் வகையில் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.

இதைக்குறித்து நிதிஷ் குமார் பேசுகையில், ‘இந்த மங்களகரமான நன்னாளில் மரங்களுக்கு ராக்கி கயிற்றை பீகார் மாநிலத்தில் மரங்களுக்கு அணிவிக்கும் ஒரு புதிய பாரம்பரியத்தைத் துவங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், மக்கள் தங்கள் சகோதர்களை எப்படி நேசிக்கிறார்களோ அதே போல மரங்களையும் நேசிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க