• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற பள்ளி குழந்தைகள் மீது இருசக்கர வாகனம் மோதிப் பலி

August 11, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் அன்பரசு, பிரியா இவர்கள் தேவிகாபுரம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக பொன்நகர் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது ஆம்பூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பள்ளி குழந்தைகள் பிரியா மற்றும் அன்பரசு இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த ஸ்ரீகன் கவலைக்கிடமான நிலையில் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர, சோதரிகளான இரு குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க