• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் பணம் கொள்ளையில் முக்கிய திருப்பம்

August 10, 2016 தண்டோரா குழு

ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 342 கோடி ரூபாயில், 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

இது குறித்து பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

இதனிடையே பணம் நிரப்புவதற்காக ஈரோட்டில் இருந்து ரயில் பெட்டி கொண்டு வரப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளை நடந்த ரயில் பெட்டியின் மீது அமர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் பெட்டியை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட போது, ஒருவருடைய கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது மர்ம நபரது ரத்தம் வெளியேறியதில் சில துளிகள் ரயில் பெட்டியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் பணம் இறக்கும் பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும், வங்கி ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் – விருத்தாசலம் வரை ரயில் பாதை மின்மயமாக்கப் படாததால் அப்பகுதியில் அங்குலம் அங்குலமாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க