• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்

August 9, 2016 தண்டோரா குழு

மலைவாழ் பழங்குடி கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள சில மலை கிராமங்கள் இன்னும் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

அந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைக்குப் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை. ஒரு அவசர நேரத்திற்கு உடனே செல்ல முடியாத நிலை வேறு அங்கு உள்ளது.

அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ் உடன் தொடர்பு கொண்டு நோயாளிகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் அங்கு அதிகமாகப் பாதிக்கப்படுவது கர்ப்பிணிப் பெண்கள் தான்.

அதனால் மாநில சுகாதாரத்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கர்ப்பிணி பெண்களைக் குறுகிய மலைப்பாதைகளில் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தால் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க