• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து

August 9, 2016 தண்டோரா குழு

ரோஜா, தளபதி, நாயகன், கடல், ராவணன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் மணிரத்தினம். இவர், ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் வசித்து வருகிறார்.

மணிரத்தினம் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார் பேட்டையில் மூன்று தளங்கள் கொண்ட அவரது வீட்டில், தரைதளத்தின் கீழே மணிரத்தினம் புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றை அமைத்து வருகிறார்.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை, அவருக்குச் சொந்தமான மெட்ராஸ் டாக்கீஸ் டப்பிங் தியேட்டரில் உள்ள ஏசி மிஷின் திடீரென தீப்பிடித்ததில், தீ மளமளவெனப் பரவி எரிய ஆரம்பித்தது.

டப்பிங் தியேட்டரில் உள்ள தொழில்நுட்ப கருவிகளும் தீயில் கருகியது. இதைப்பார்த்த அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் உடனடியாக தீயணைப்புதுறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவிகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க