• Download mobile app
15 Apr 2026, WednesdayEdition - 3717
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் பாபு. 10ம் வகுப்பு பெயில்.

August 6, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாபு. 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காமராஜ் நகரில் மருத்துவமனை வைத்துள்ளார். இவரிடம் குருபரபள்ளியை அடுத்த பண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகம்மாள்(25) என்பவர் காலில் உள்ள கட்டியை அகற்ற வேண்டும் எனக் கூறி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.இதையடுத்து பாபு, முருகம்மாளுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய ஊசி போட்டுள்ளார்.

இதையடுத்து மயக்கமுற்ற முருகம்மாள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தாலுகா காவல்துறையினர் பாபு போலி மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் பாபுவை கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க