• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி

August 5, 2016 தண்டோரா குழு

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்திபென் படேல், சமீபத்தில் அறிவித்தார். பா.ஜ.வின் உயர்மட்ட குழுவான, பார்லிமென்ட் குழு கூட்டத்தில், ஆனந்திபென் படேலின் ராஜினாமா ஏற்கப்பட்டது. தனது ராஜினாமா குறித்து விரைவில், 75 வயது நிறைவடைவதால், இளைஞர்களுக்கு வழிவிட்டு, முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் என, ஆனந்தி பென் விளக்கமளித்தார். இதனையடுத்து அடுத்த முதல்வருக்கான போட்டி நிலவியது. விஜய் ரூபானி மற்றும் நிதின் பட்டேல் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் காந்தி நகரில் உள்ள பா.ஜ. தலைமை அலுவலகத்தில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பா.ஜ தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சரோஜ் பாண்டே, பா.ஜ எம்.ஏல்.ஏ.,க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், விஜய் ரூபானி முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவர் குஜராத் மாநில பா.ஜ., தலைவராகவும் உள்ளார்.

குஜராத்தின் புதிய முதல்வராகத் தேர்வாகி உள்ள விஜய் ரூபானி, 60, 1956 ஆக., 2ல் பிறந்தார். பி.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றவர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மூலம் பொது வாழ்வைத் துவக்கினார். மேலும் மாணவராக இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ்., மாணவர் சங்க தலைவராகவும் இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருந்த இவர், 1971ல் ஜன் சங் அமைப்பிலும் சேர்ந்தார். ஜன் சங் தான் 1980ல் பா.ஜ., வாக உருவெடுத்தது. தற்போதைய குஜராத் அமைச்சரவையில், நெருக்கடி நிலையின் போது சிறை சென்றவர் இவர் ஒருவரே.

ராஜ்கோட் நகர மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகிய பதவிகளை வகித்துள்ளார். குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, இவர் குஜராத் மாநில பா.ஜ., பொதுச் செயலராக பதவி வகித்தார். 2014ல் குஜராத் சட்டசபை சபாநாயகராக இருந்த வஜூபாய் வாலா என்பவர், ராஜினாமா செய்ததால், ராஜ்கோட் மேற்கு சட்டசபை இடைத்தேர்தலில் 23,740 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். ஆனந்தி பென் அமைச்சரவையில், போக்குவரத்து, குடிநீர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.

குஜராத் துணை முதல்வராகத் தேர்வாகி உள்ள நிதின் படேல், 60 தற்போது குஜராத் மாநில சுகாரதாரம், குடும்ப நலத் துறை, மற்றும் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

மேலும் படிக்க