• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீண்ட சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய உலகநாயகன்

August 4, 2016 தண்டோரா குழு

கமலின் பட்ஜெட் படமான சபாஸ் நாயுடு கடந்த மாதம் அமெரிக்காவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. பின்னர் சென்னை திரும்பிய உலக நாயகன், அடுத்த கட்ட படப்பிடிப்புக்குச் செல்வதற்கான ஆயத்த பணிகளை ஆழ்வார் பேட்டை அலுவலகத்தில் இருந்தவாறு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி அலுவலக மாடியில் இருந்து இறங்கி வரும் போது எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் தவறி விழுந்தார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் கால் முட்டி உள்ளிட்ட இரு இடங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் நேற்று முன்தினம் எழுந்து நடக்கத் தொடங்கியதாக டிவீட் செய்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு சந்தோசமான நிகழ்வாக, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் உலகநாயகன்.இதனிடையே மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்னும் ஒரு மாத கால ஓய்வு தேவைப்படுவதாகவும், இதனால் அதன் பின்னரே பட வேலைகளைச் செய்யமுடியும் எனவும் அவரது அலுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க