தமிழறிஞரும்,பட்டிமன்ற நடுவரும்,ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அறிவொளி(80)உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.
அறிவொளியின் சொந்த ஊர்,நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல் ஆகும்.1986ல் முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய இவர் அண்ணாமலை பல்கலைக்கழகம்,பூம்புகார் கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார்.உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச் சென்ற இவர்,புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் திறமையை பாராட்டி ஆய்வுரை திலகர் பட்டம், கபிலவாணர்,உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் திருச்சி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அறிவொளி நேற்றிரவு காலமானார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு