• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மழை அக்னி நட்சத்திரத்தின் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி

May 8, 2018 தண்டோரா குழு

கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருந்து வருகின்றனர்.கோவையிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டி வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம்,உக்கடம்,கணபதி,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம்,கவுண்டம்பாளையம், மருதமலை,பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை கோவை மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க