• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாய், மகளைக் கற்பழிப்பு வழக்கு 3 பேர் கைது, மேலும் பலருக்கு வலைவீச்சு

August 1, 2016 தண்டோரா குழு

சமீபகாலமாக பாலியல் குற்றச்சாட்டு என்றாலே அது உத்தரபிரதேசம் தான் என்ற நிலை உருவாகி வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

காரில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் 13 வயது மகளைக் காரை வழிமறித்துக் கடத்திச்சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில் தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மெத்தன நடவடிக்கை காரணமாக 3 காவல்துறை அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நொய்டாவில் இருந்து ஷாஜஹான்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தனர். புலந்த்ஷகர் எனுமிடம் அருகே வந்தபோது, அவர்களது காரை ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது. பின்னர் காரில் இருந்த தாய், அவரது 13 வயது மகள் ஆகியோரை இழுத்துச் சென்று அந்தக் கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.

பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்லிடப் பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளது. அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த ஒருவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகச் செயல்பட்ட புலந்த்ஷகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க