• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் மிகப்பெரிய நாயாக கிரேட் டேன் நாய் அறிவிப்பு

July 28, 2016 தண்டோரா குழு

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்டேன் என்ற வகையைச் சேர்ந்த நாய் உலகின் மிகப்பெரிய நாயாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் பிரையன் மற்றும் ஜூலி வில்லியம்ஸ் தம்பதியினரின் வளர்த்துவரும் இந்த நாய்க்கு தற்போது மூன்று வயது ஆகிறது.

இந்த கிரேட் டேன் நாய், அதன் பின்னங்கால்களைத் தூக்கினால் 7 அடி உயரத்திற்கு மேலாகவும் 12 கல் எடையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த நாய் நாளொன்றுக்கு 22 மணி நேரம் உறங்குவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுடன் நன்றாகப் பழகும் தமது நாய் தனது நிழலைப் பார்த்து தானே அச்சமடைவதாகவும் பிரையன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க