தேவையான பொருட்கள்:
பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 1
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், பிரட் முட்டை உப்புமா ரெடி!!!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்