• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா?உயர்நீதிமன்றம் கேள்வி

March 22, 2018 தண்டோரா குழு

எச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற புகாரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வன்முறையை துண்டும் விதமாக எப்போதும் பேசி வருவதாக கூறி அவர் மீது சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மனநலபாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதால் அவருக்கு மனநல பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹெச்.ராஜாவிற்கு மனநல பிரச்சனை இருந்தால் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அம்பத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஹெச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா என அம்பத்தூர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதனையடுத்து, இதுகுறித்து வருகிற 28ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அம்பத்தூர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

மேலும் படிக்க