• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் ஒரு சாக்கடை அதில் எந்த குப்பை விழுந்தா என்ன? – மு.க. அழகிரி

February 19, 2018 தண்டோரா குழு

அரசியல் ஒரு சாக்கடை என்றும் அதில் எந்த குப்பை விழுந்தாலும் கவலையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே உள்ளே கோயில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முக அழகிரி கலந்துகொண்டார்.  அப்போது அவரை பேட்டியடுக்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி அரசியல் ஒரு சாக்கடை அதில் எந்த குப்பை விழுந்தாலும் எனக்கென்ன என்று கேட்டார்.

அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். முதுமை காரணமாக கருணாநிதி கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கருணாநிதி அழைத்தால் திமுகவில் இணைவேன் என்று அழகிரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க