February 16, 2018
தண்டோரா குழு
காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில்,
காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.அதே நேரத்தில் காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இனி கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள்.வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்ற நோக்கில் சச்சரவை ஏற்படுத்திவிடக்கூடாது உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது.
மேலும்,காவிரி வழக்கின் தீர்ப்பு போராடுவது உதவாது,இதற்கு தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்.