February 15, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தையை,வனத்துறையினர் பரம்பிகுளத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் நேற்று(பிப் 14) சிக்கியது.
கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 8ஆம் தேதி செய்துல் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது,அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்துச் சென்றது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது.
இதையடுத்து ஆட்கொல்லியாக மாறிப் போன சிறுத்தையைப் பிடிக்க நடுமலை எஸ்டேட்,சிஎஸ்ஐ சர்ச் வளாகம்,பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டன.அதில் நடுமலை எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
இந்நிலையில் பிடிபட்ட அந்த சிறுத்தையை பரம்பிகுளத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.