• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு!

February 14, 2018 தண்டோரா குழு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 19ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் சிறுமி  ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை தொடர்பாக அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் 2ம் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பி சென்று  மும்பையில்  மீண்டும் பிடிபட்டார்.இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.

 

 

மேலும் படிக்க