• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணைவேந்தர் கணபதிக்கு போலீஸ் காவல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

February 9, 2018 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார்.

கோவையில் லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று
(பிப் 9)நடைபெற்றது

ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ விடுமுறை என்பதால், வழக்கினை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணைக்காக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஊடகங்களை பார்த்த துணைவேந்தர் கணபதி ஆவேசமாக பேசினார்.அப்போது எழுதும் போது மனசாட்சியுடன் எழுதுங்கள்,எதைவேண்டுமானலும் எழுத வேண்டும் என எழுதாதீர்கள்,மனித தன்மையுடன் எழுதுங்கள் என ஊடகங்களை பார்த்து துணைவேந்தர் கணபதி தெரிவித்தார்.

இதனையடுத்து காவலில் எடுக்க அனுமதி கோரும் மனுவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் விசாரித்தார்.இதனை தொடர்ந்து துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவை 12 ம் தேதிக்கு நீதிபதி ஓத்திவைத்தார்.இதே போல துணைவேந்தர் கணபதி
முதல் வகுப்பு கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுவும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க