• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தக்காளி விலை வீழ்ச்சி – விவசாயிகள் வேதனை

February 8, 2018 தண்டோரா குழு

கோவையில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் போதிய விலை கிடைக்காததால் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே அழுகவிட்டு உள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 290 எக்டர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்ததால் செடிகளில் இருந்து தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டதால் தக்காளி செடியிலேயே அழுகி வீணாகி வருகிறது.

மேலும்,ஒரு கூடை தக்காளி 120 ரூபாய் முதல் 145 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் ஒரு கூடை 60 ரூபாய்க்கும் குறைவாகவே விலை போகிறது. தக்காளி பறிக்க ஆட்கள் கூலி, பறித்த தக்காளியை
மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் வண்டி வாடகை உள்ளிட்டவற்றுக்கு கூட போதுமான விலை கிடைக்கததால் தக்காளியை பறிக்காமல் விட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க