• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமா ?

February 5, 2018 தண்டோரா குழு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்த சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த இடத்தில் கடை நடத்தி வரும் முருக பாண்டி என்பவர் கடையை பூட்டிவிட்டு திருஷ்டி சுற்றிய காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால்,மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு திருஷ்டி சுற்றியது தான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்து கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க