• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மனுக்கு சுடிதார்- குருக்கள் பணி நீக்கம்

February 5, 2018 தண்டோரா குழு

மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அருள்பாளிக்கும் அபயாம்பிகை  அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்து பூஜை செய்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவாடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியிருந்தனர்.இந்நிலையில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள் உள்ளிட்ட இருவரை பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க