• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

February 5, 2018 தண்டோரா குழு

கோவையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே,தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக , திக , மதிமுகப், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 க்குக் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா நிறைவேற மத்திய அரசிற்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும்,பன்முக கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா போன்றொரு நாட்டில் ஒரே முறை தேர்வு என்பதை ஏற்க முடியாது என்பது போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க