• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்ட மன்றத்தைக் காக்க ஆட்படையுடன் நாய்ப் படை

July 18, 2016 தண்டோராக் குழு

சட்டமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் நடைபெறும் இவ்வேளையில் ,தீவிரவாதத் தாக்குதலிருந்து காப்பாற்ற நாய்ப் படையை உபயோகிக்க உள் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

பாராளுமன்ற வளாகம் 2001ம் ஆண்டு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.அதே போன்ற சம்பவம் நடந்தால் பாதுகாப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

பலவிதமான அடுக்குப் பாதுகாப்புகளைக் கொண்டது இந்த வளாகம்.அனைவரையும் எல்லாவித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபின்னரே உள்ளே அனுமதிப்பர்.

எனினும் சாதாரணமாகக் காணப்படும் பூத்தொட்டிகளுக்குள்ளோ,அல்லது மேஜையின் கீழோ வெடிபொருட்கள் மர்ம நபர்களால் வைக்கப் பட்டிருந்தால் கண்டறிவது கடினம்.

அதைக் கண்டறிய மோப்ப நாய்கள் அவசியம்.இதன் காரணமாகவே பாராளுமன்ற பாதுகாப்பு சேவை மையம் இந்திய திபெத் எல்லையோரக் காவல் படையினரின் கிராக் K9 எனப்படும் நாய்ப் படையின் உதவியை நாடியுள்ளது.

இந்த நாய்கள் எவரேனும் வெடிபொருட்களைத் தொட்டிருந்தாலும் கூட அதைக் கண்டுபிடிக்க வல்லதாகும்.இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் கோல்டன் நோஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

தீவிர வாதிகளும் அவர்களை வெளியேயிருந்து கையாளும் நபர்களும் மின்னணு மூலம் உரையாடுவதையும் பகுத்தறிய இவை பயன்படும்.உலகிலேயே சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்கள் ITBP யைச் சேர்ந்தவைகளே.

அதன் காரணமாகவே அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வரும்போது பாதுகாப்பிற்காக இப்படையின் உதவியை அமெரிக்கக் கப்பல் படை நாடுவது வழக்கம்.

மழைக் காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இந்த ஆபரேஷன் கோல்டன் நோஸ் ITBP யின் DIG ஆர்.சி. பைஜ்வன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் படிக்க