• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பாப்பீஸ் ஹோட்டலில் கேரளா உணவு திருவிழா துவங்கியது

February 3, 2018 தண்டோரா குழு

கோவை பாப்பீஸ் ஹோட்டலில் கேரளா உணவு திருவிழா “நாடன் பக்ஷ்னா மேளா ” நேற்று(பிப் 2) துவங்கியது.

கோவை பாப்பீஸ் ஹோட்டல் நடத்தும் “கேரளா நாடன் பக்ஷ்னா மேளா” உணவுத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த உணவு திருவிழாவை கோவை உமன்ஸ் சென்டர் மருத்துவ இயக்குனர் டாக்டர்.மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.சைவம் மற்றும் அசைவ உணவுகளின் திருவிழாவாகக் கொண்டாடப்பட உள்ள இந்த விழாவில், மீன், கோழி, சிவப்பு இறைச்சிகள் சார்ந்த உணவுகள் பரிமாறப்பட்டன.

இது குறித்து கோவை பாப்பீஸ் ஹோட்டல், ஆப்ரேஷன் மேனேஜர்,ஆர்.ஜெயராமன் கூறுகையில்,

கேரளாவின் முக்கிய திருவிழாவான விஷுவையொட்டி, இந்த உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் 67 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. உடனடியாக உணவுகளை தயாரித்து பரிமாறும் 5 உணவு கவுன்டர்களும் உள்ளன.

உலக மற்றும் தேசிய அளவில் புகழ்வாய்ந்த தலைமை சமையல் கலைஞர் ராஜா தான் இவ்விழாவில் சிறப்பாளராக பங்கேற்கிறார். இவரும், இவரின் குழுவினரும் கேரள மாநிலத்தின் தலைசிறந்த உணவுகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளனர்.

இந்த உணவுத் திருவிழாவில் கோழி. மீன், செம்மீன் ஊருகாய் இஞ்சிபுளி, மலபார் நண்டு சாரு, பச்சை மாங்கா மிளகு பொடி இட்டது, மத்தி மீன் பிரை, வழுதலங்கா அரைச்ச கறி, மதுரம் கறி, தலச்சேரி கோழி பிரியாணி சக்க பிரதமன், இதைத் தவிர, அப்பம், மலபாரி பரோட்டா, மீன் பொல்லிச்சது பதிதிரி, பழம்பொரி ஆகியவை லைவ் கவுன்டர்களில் உடனடியாக தயாரித்து வழங்கப்படும்.

இதுமட்டுமின்றி  உணவுத் திருவிழா நடைபெறும் திறந்தவெளியில் நீர்நிலைகளில் கேரள மாடல் படகுகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரம் திருவிழாவிற்கு வருவோரை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உணவுத் திருவிழாவில் உணவுகளை பரிமாறும் ஊழியர்களும் கேரளாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து இருப்பார்கள் என்றார்.இவ்விழா பிப்ரவரி 2 முதல் 6 தேதி வரை தினமும் இரவு 7.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறும். விழாவில் பங்கேற்க ஒரு நபருக்கு ரூ.799 கட்டணமாக பெறப்படும். மேலும், 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ரூ.500 கட்டணமாக பெறப்படும்.

மேலும் படிக்க