• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

February 2, 2018 தண்டோரா குழு

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்காலத் தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள 15 அச்சகங்களை ஒன்றாக இணைத்து 5 அச்சகங்களாக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதனையடுத்து கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 134 ஏக்கரில் செயல்படும் அச்சகம் மூடப்பட்டு, 65 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால், தீர்ப்பாயம் தடை விதிக்க மறுத்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை மூட இடைக்கால தடை விதித்ததுடன், ஊழியர்களை இடமாற்றம் செய்யவும் தடை விதித்து விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

மேலும் படிக்க