• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர், கல்பனா சாவ்லாவின் நினைவு தினம்

February 1, 2018 தண்டோரா குழு

இந்தியாவின்  முதல் பெண் விண்வெளி வீரர், கல்பனா சாவ்லாவின் 15ம் ஆண்டு, நினைவு தினம் இன்று(பிப் 1) அனுசரிக்கப்படுகிறது.

கல்பனா சாவ்லா கடந்த 1962ம் ஆண்டு, மார்ச் மாதம் ஹரியானாவில் பிறந்தார்.அவர் அதே மாநிலத்தில் உள்ள கர்ணால் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக் துறையில் படித்தார். கடந்த 1982ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பிறகு, கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

கடந்த 1997ம் ஆண்டு, கொலம்பியாவின் விண்வெளி விண்கலSTS-87 என்னும் விமானத்தில் பறக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, 2003 ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி சாவ்லா உட்பட 7 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு கிளம்பியது. தனது ஆராய்ச்சியை முடித்து விட்டு பிப்ரவரி 1-ம் தேதி திரும்பிய போது விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தரையிறங்குவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் வெடித்து சிதறியது.இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட 7 பேரும் மரணமடைந்தனர்.

இந்நிலையில், இன்று கல்பனாவின் 15-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

 

மேலும் படிக்க